ஆணுக்கு குழந்தை பிறந்தது

வயிற்று வலி காரணமாக நேற்று (22) மாத்தறை வைத்தியசாலைக்கு ஆணாக சென்ற ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.
தனது அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் சகிதம் மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற குறித்த நபர் தனக்கு வயிற்றில் வலி இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர்.
வயிற்று வலி அதிகமானதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஆண் போல நடித்த பெண் என்பதை கண்டறிந்து அவரை பிரசவ விடுதிக்கு அனுப்பினர்.
இதனையடுத்து அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
26 வயதுடைய தெவிநுவர பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு ஆண் போல வேடமிட்டு வந்தவரென்றும், இவர் முச்சக்கரவண்டிச் சாரதியாக தொழில் செய்து வந்தவரென்றும் தெரியவந்துள்ளது.

No comments