இந்திய மீனவர்கள் 11 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அத்தோடு குறித்த மீனவர்களிடமிருந்து இழுவைப் படகு உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் மற்றும் மீன்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை எலர கடற்படை முகாமில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments