கடற்படை வான் மோதி ஒருவர் பலி!

முல்லைத்தீவு - மல்லாவி பிரதான வீதி வட்டுவாகல் பாலத்துக்கு அருகிலுள்ள வளைவு பகுதியில் கடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இன்று (11) காலை முல்லைத்தீவிலிருந்து மல்லாவி பகுதியை நோக்கிச்சென்று கொண்டிருந்த கடற்படையினரின் வாகனத்துடன் கணவன் மனைவி ஆகிய இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதன்போது தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வரும் மல்லாவி, துனுக்காய், ஒட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கேஜீவன் (28-வயது) உயிரிழந்தார், மனைவியான கே.டினுஜா (24-வயது) படுகாயமடைந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியான கடற்படையைச் சேர்ந்தவர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை இடம்பெற்று வருகின்றது.

No comments