லத்தீப்பிற்கும் தொடர்பாம்: நவ சிங்கள ராவய?


ஏப்ரல் தாக்குதலுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரியான  பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர்.லத்தீப்பிற்குமிடையே தொடர்பு இருப்பதாக கடம் போக்கு சிங்கள அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.கடும் போக்கு சிங்கள பௌத்த அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

தாக்குமல் நடப்பதற்கு முன்னதாக  பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர்.லத்தீப் நடவடிக்கை எடுத்திருந்தாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

“சஹ்ரானின் தாக்குதலுக்கு அண்மித்த காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினை லத்தீப் கலைத்துள்ளார்.

ஏப்ரல் தாக்குதலுக்கு 08 மாதங்களுக்கு முன்னதாக களவாஞ்சிக்குடியில் உள்ள புலனாய்வு பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை, களவாஞ்சிக்குடி விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமில் புலனாய்வு பிரிவு இல்லை.

அங்கிருந்த புலனாய்வு அதிகாரிகள் கொழும்பு, மருதானைக்கு அழைக்கப்பட்டுவிட்டனர்” என்றும் மாகல்கந்தே சுதந்த தேரர் கூறியுள்ளார்.

No comments