யாழில் எம்ஜிஆர் நினைவேந்தல்

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜி. இராமச்சந்திரனின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் இன்று (24) நடைபெற்றது.
எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளரான சுந்தரலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் கல்வியங்காட்டிலுள்ள எம்ஜிஆரின் சிலையில் இன்று (24) மதியம் இந் நிகழ்வு நடைபெற்றது. 
இதன் போது சிலைக்கு மலர் மாலை அணிவித்து தீபங்கள் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


No comments