மலையக தியாகிகள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) தலவாக்கலை டெவோன் பிரதேசத்தில் இடம்பெற்றது.
தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகி சிவனு லெட்சுமனனின் கல்லறை அமைந்துள்ள பகுதியிலேயே இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
மலையக உரிமை குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்த நினைவு கூரல் நிகழ்வில், பொது சுடரை தோட்ட தொழிலாளர் ஒருவர் ஏற்றி, ஆரம்பித்து வைத்தார்.
அதன்பின்னர் மலையக உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து மலையக தியாகிகளையும் பொது தினத்தில் நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி மலையக தியாகி நினைவேந்தல் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
நிகழ்வில் மலையக உரிமை குரல் தலைவர் இராமச்சந்திரன் சனத், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், ஈரோஸ் அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளர் ஜீவன் ராஜேந்திரன், ஊடகவியலாளர்கள், தியாகிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments