மட்டக்களப்பில் மழையின் தாண்டவம் தொடர்கிறது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கல்குடாத் தொகுதியின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

இதன்காரணமாக மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து செல்லும் நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக வாகரை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, கிரான் போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடும் மழை காரணமாக வெள்ள நீர் அதிகரித்து காணப்படுகின்றது.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 1928 பேரும், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை மற்றும் மாஞ்சோலையில் 32 குடும்பமும், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 159 குடும்பங்களைச் சேர்ந்த 469 பேர் பாதிக்கப்பட்டு உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர்.

No comments