யாழில் இதுவரை 1874 குடும்பங்கள் வெள்ளத்தால் அவதி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 1,874 குடும்பங்களைச் சேர்ந்த 6,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தை தவிர்ந்த ஏனைய 14 பிரதேச செயலக பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அரச அதிபர் 177 மண்குடிசைகள், சிறுவீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments