கிளிநொச்சியை அல்லல்பட வைக்கும் மழை! வான்கதவும் திறப்பு

கிளிநொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இரத்தினபுரம், உருத்திரபுரம், ஆனந்தபுரம், சிவபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன் பன்னங்கண்டி, சிவபுரம், கண்டாவளை, தட்டுவன்கொட்டி, சிவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

இதேவேளை முல்லைதீவு தண்ணிமுறிப்புகுள வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளது. மேலும் இரணைமடு பகுதியில் உள்ள இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.




No comments