காணாமல் போனோருக்கு நீதி தரப்போகும் டக்ளஸ்!


வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தன்மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்துக்கொள்ள டக்ளஸ் கடுமையான முயற்சிகளில் குதித்துள்ளார்.அதன் ஒரு கட்டமாக காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களை சந்திக்க அவர் பாடுபட்டு வருகின்றார்.
இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் முன்வைக்கும்  நியாயமான கோரிக்கைளை ஆராய்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேசி பரிகாரங்கள் பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் மிக விரைவில் அக் குடும்பங்களின் வாழ்வாதார நிலையும் கட்டியெழுப்ப போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் காணாமல் போனோரது குடும்பங்களை சந்தித்துள்ளார்.
அவர்களது கண்ணீருக்கும் அவர்களது கோரிக்கைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முண்டுகொடுத்து வந்த நல்லாட்சி அரசு எதுவித தீர்வுகளும் பெற்றுக்கொடுக்காது தமது சுயநல அரசியலுக்காக அவர்களது உணர்வுகளையும் போராட்டத்தையும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

கடந்த 5 வருடங்களாக நல்லாட்சி அரசை தமது சுயநலன்களுக்காக தாங்கிப்பிடித்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்பிரச்சினைக்கு இலகுவாக தீர்வுகளை கண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் இந்த பிரச்சினையை தீராப்பிரச்சினையாக வைத்திருக்க வேண்டும் என்றே காலத்தை கடத்தி வந்திருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கோட்டாபய ராஜபக்சஷ பதவிக்கு வந்த பின்னர் முன்னாள் போராளிகள், போர்க் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தவர்கள் மற்றும் குற்றச்செயல்களில் குற்றம் சாட்டப்பட்டோரின் குடும்பங்களுக்கு புலனாய்வாளர்கள் எனக் கூறுவோரால் அலைபேசி ஊடாக கப்பம் கோரப்பட்டது.

பொலிஸ் புலனாய்வாளர்கள் பேசுகின்றோம் எனத் தெரிவிக்கும் அவர்கள், குடும்பத்தில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரைக் கைது செய்ய உத்தரவு கிடைத்துள்ளதாகவும் கைது செய்யாமல் விடுவதற்கு தாம் கூறும் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிடுமாறு கோருகின்றனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த வாரம் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவர் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் வைப்புச் செய்துள்ளார்.

அதன்பின்னர் அழைப்பு எடுத்தவரின் அலைபேசி இலக்கம் துண்டிக்கப்பட்டதால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணத்தை வைப்பிலிட்ட சிட்டையுடன் அச்சுறுத்தலுக்குள்ளானவர் முறைப்பாட்டை வழங்கியிருந்தார்.

விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை பொலிஸார், வங்கிக் கணக்கிலக்கத்துக்கு உரியவரை அளவெட்டிப் பகுதியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கப்பம் கோரி அலைபேசி அழைப்பை எடுத்தவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் மறியலில் இருப்பவர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, புலனாய்வாளர்கள் எனக் கூறி அலைபேசியில் கப்பம் கோரப்பட்டால் எந்தவொரு பயமுமின்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

No comments