திசைதிரும்பிய குற்றம்; சுவிஸ் தூதரக ஊழியர் கைது;

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் இன்று (16) சற்றுமுன் போலியான ஆதாரங்களை உருவாக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சுவிஸ் தூதரக பெண் ஊழியர் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாக அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் சிஐடிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படியே சிஐடியில் ஆஜராகியிருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments