அமெரிக்காவுக்கு மிரட்டலா; சீன, ரஷ்யாவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈரான்!

இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் சீனா, ரஷ்யாவுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி நடத்தியதை ஈரான் உறுதிப்படுத்தி உள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் ஈரான்,ரஷ்யாவுடன் இணைந்து இந்திய பெருங்கடல் மற்றும் கல்ஃப் ஆஃப் ஓமனில் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்த இருப்பதாக சீனா தெரிவித்தது.

இந்தக் கூட்டு ராணுவ பயிற்சி மூன்று நாடுகளுக்கு இடையேயான கடற்படை ஒத்துழைப்பை இன்னும் ஆழமாக்கும் என்றும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சீனா, ரஷ்யாவுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி நடத்தியதை ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன

நான்கு நாள் நடைபெறும் கூட்டு ராணுவ பயிற்சி குறித்து ஈரான் தரப்பில், “இந்தக் கூட்டு ராணுவ பயிற்சி மூலம் கூறப்படும் செய்தி என்னவென்றால் அமைதி , நட்பு, நீடித்த பாதுகாப்பு. இது ஈரானை தனிமைப்படுத்த முடியாது என்று காட்டுக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

No comments