தெருவில் வீசப்பட்ட சிசு

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியின் 4ம் கட்டைப் பகுதியில் கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அநாதரவாக வீசப்பட்ட பிறந்து ஒரு நாளேயான சிசு மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சிசு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்வீதியினால் சென்ற ஒருவர் இக் குழந்தையைக் கண்டுள்ளதுடன் இது தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழு, அம்புலன்ஸை வரவழைத்து உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அச்சிசுவை அனுப்பினர்.

குறித்த சிசுவை பிரசவித்த தாய் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments