யாழில் 3 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 3 கிராம் ஹெரோயின் பக்கட்டுடன் 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (11) மதியம் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய உடமையில் ஹெரோயின் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டையடுத்து மேற்படி இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர்.

No comments