அம்மானும் பிசி:பாரூக் பாய்ஸ் இன்னொருபுறம் பிசி!


ஆட்சி மாற்றத்தின் பின்னராக கிழக்கில் கருணா ஒருபுறம் மும்முரமாக களமிறங்க கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னை இராணுவ புலனாய்வு பிரிவென சொல்லிக்கொள்ளும்(பாகீஸ்)'பாரூக் பாய்ஸ்' எனும் நபரது அடாவடிகள் பற்றி தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது.

போரினால் இடம்பெயர்;ந்த தமிழர்களின் காணிக்கு கள்ள உறுதி செய்து தன்னுடைய பெயரில் மாற்றி அவற்றை விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளார்.

தான் இராணுவ உளவுத்துறையை சேர்ந்தவன் எனக் கூறிக்கொள்ளும் இவர் விடுதலை புலிகளுடன் நெருங்கியவர்களின் காணிகளையும், பொதுமக்களது காணிகளையும் இவ்வாறு கள்ள உறுதி செய்து ஆக்கிரமித்து வருகிறார்.

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் உறவினர் என இதுவரைநாளும் கூறிவந்த குறித்த மோசடி நபர் இப்போது ஆட்சி மாறியவுடன் தான் நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் எனவும் சொல்லி திரிவதாக மக்கள் கூறுகின்றனர்.

கிழக்கில் கருணா தற்போது மகளிர் விவகார அமைச்சராகி மும்முரமாக வடக்கில் காணி பிடிப்பில் ;(பாகீஸ்)'பாரூக் பாய்ஸ் மும்முரமாகியுள்ளார்.

No comments