போதைபொருள் கட்டுப்பாடு பெயரில் முப்படைகள் இறக்கம்!


போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிப்பதற்கான சுற்றிவளைப்பு எனும் பெயரில் மீண்டும் சுற்றிவளைப்பு தேடுதல்களை நடத்த முப்படைகளும் தயாராகிவருகின்றன. போதைப்பொருள் கட்டுப்பாடு என்ற பெயரில் கடுமையான முறையில் சோதனைகளை முன்னெடுக்க முப்படைகளின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் முப்படையினருடன் கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோத்தபாய ஜனாதிபதியாக பதவியேற்றதும் முப்படைகளிற்குமான அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறை சுத்திகரிப்பு பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

No comments