சிவாஜிக்கு வாக்களியுங்கள்: வவுனியா உறவுகள்

இந்து கோயில்களுக்குள் பெளத்த துறவிகளின் உடல் தகனம் செய்யாமல் இருக்க ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள் என வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று காணாமல்போன உறவுகள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், “நாங்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை.
தமிழர்களை அழித்தவர்களுக்கும்  சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் தமிழர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள். ஒன்றுபட்ட ஒருமித்த நாட்டுக்குள் ஐக்கிய இராச்சிய தீர்வையே சஐித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமாக உள்ளது.
மாகாணங்களுக்கு அதிகார பரவல் என்பது பொய். சிங்களவர்களே சிங்களவர்களை ஆட்சிபுரிகின்ற நாட்டில் சிங்கள மாகாணங்களுக்கு எதற்கு அதிகாரம்? வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என காண்பிக்க தமிழர்களை பாதுகாக்க தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள்.
இந்து கோயில்களுக்குள் பெளத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள்” என மேலும் தெரிவித்தார்.

No comments