தப்பிச் சென்ற சிஐடி சில்வா குறித்து விசாரணை

பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நேற்று (24) தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

அவர் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.

இந்நிலையிலேயே நிஷாந்த த சில்வா அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments