கோத்தாவின் பவர் ப்ளே; பறிக்கப்பட்டது சிஐடி பணிப்பாளர் பதவி

இராணுவத்திற்கு எதிரான வழக்குகளை வழிநடத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (சிஜடி) பணிப்பாளர் ஷானி அபேசேகர தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவர், லசந்த விக்ரமதுங்க, வாசிம் தாஜுதீன் படுகொலை மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களின் கடத்தல், படுகொலைகள் தொடர்பான வழக்குகளை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த வழக்குகளை விசாரணை செய்து வரும் சிஐடி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வாவும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.

No comments