மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரவிகரன்


முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம், உயர் குருதி அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தம் சிகிச்சைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments