தொடங்கியது கோட்டா படையினது சாதனை!


ஆயிரமாவது நாளை தாண்டி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டம் தொடர்கின்ற நிலையில் அவர்கள் மீண்டும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளனர். வவுனியாவில் போராட்டத்தை முன்னெடுக்கும் குடும்பங்கள் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். 

நேற்றைய தினமான புதன் கிழமை( 20 ) போராட்டம் நடை பெறும் இடத்திற்கு சிவில் உடையில் வந்த இருவர் தம்மை பொலிசார் என அறிமுகம் செய்து குறித்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த போகிறீர்களா அல்லது முடிப்பீர்களா? என விசாரணை செய்ததாக அவர்கள் கூறினர்.

இதற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின்ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமக்கு யார், எப்போது தீர்வினை வழங்குகிறார்களோ அந்த நிமிடமே குறித்த போராட்டத்தை நிறுத்துவோம் என தெரியவருகின்றது.

No comments