கோத்தாவின் பட்டாளக் குள்ள நரிகள் தமிழரிடம் கெஞ்சுகின்றன

17, 18ம் திகதி சஜித் பிரேமதாச இந்நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பது நிச்சயமான ஒன்று என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (08) சற்றுமுன் கிளிநொச்சியில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

மேலும்,

வடக்கு, கிழக்குக்கு மஹிந்த ராஜபக்ச பட்டாளம், கோத்தாபய ராஜபக்ச பட்டாளம், நாமல் ராஜபக்சய பட்டாளங்கள் வந்து தந்திரமான செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர்.

கெஞ்சுகின்றனர். எமக்கு வாக்களிக்காது விட்டால் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களியுங்கள். இல்லை சஜித் அல்லாத எவருக்கும் வாக்களியுங்கள் என்கின்றனர். இதுதான் அவர்களது குள்ளநரி தந்திரம் - என்றார்.

No comments