இராஜினாமாச் செய்கிறார் மஹிந்த!?

தேர்தல்கள் ஆணையாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் இன்று (29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும்,

மஹிந்த தேசப்பிரிய தனது முடிவை முன்னதாக ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

அத்துடன் மஹிந்த தேசப்பிரிய கடந்த காலத்தில் முன்னெடுத்த சிறப்பான சேவைகளை கருத்திற் கொண்டு, அவர் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

No comments