இனப்பாகுபாடு பார்த்திருந்தால் சிவாஜி வென்றிருப்பார்

தமிழ் மக்கள் இனப் பாகுபாடு பார்த்தோ, மத பாகுபாடு பார்த்தோ இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறையில் நேற்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அனைத்து மக்களையும் ஒரே பார்வையில், ஒரே குடையின்கீழ், இன, மத, மொழி பாகுபாடு அற்ற முறையிலே இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் மனதை வெல்லக்கூடிய வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் நோக்கமும் சிந்தனையும் எண்ணமும் தங்களது இன விடுதலை சம்பந்தமாகவும் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து வடகிழக்கில் பயணிக்க வேண்டும் என்பதனை உலகத்திற்கு பறைசாற்றியிருக்கிறார்கள்.

அதனடிப்படையிலேதான் இம்முறை வடகிழக்கு தமிழர்கள் ஒன்றுசேர்ந்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.குறிப்பாக தமிழ் மக்கள் இனப் பாகுபாடு பார்த்தோ, மத பாகுபாடு பார்த்தோ இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இனப் பாகுபாடு பார்த்து தமிழ்மக்கள் வாக்களித்திருப்பார்களானால், அவர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள் - என்றார்.

No comments