நாடாளுமன்ற தேர்தல்:ஆணைக்குழு கூடுகின்றது!


நாடாளுமன்ற தேர்தலிற்கு கோத்தாபாய தரப்பு மும்முரமாக தயாராகிவருகின்ற நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று (25) பிற்பகல் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னராக தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments