யாழில் இருந்து சென்னைக்கு வணிக விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலில் வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இவ்வாறு வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி விமான நிலையங்களிற்கு இவ்வாறு நாளாந்த வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments