மன்னாரை அதிர வைக்கும் கஞ்சா கடத்தல்; சிக்கியது 200 கிலோ

மன்னாரில் இரண்டு கோடி பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்-மன்னார் பிரதான வீதி, மாந்தை சந்தியில் வைத்து நேற்று (22) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து சுமார் 200 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் குறித்த கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றினர்.

No comments