பூநகரியில் நேருக்கு நேர் மோதிய பாரவூர்திகள்: பலர் படுகாயம்

கிளிநொச்சி - பூநகரி செல்விபுரம் வீதி வளைவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இன்று (23) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்தவர்களில் மூவர் யாழ். வைத்தியசாலையிலும், ஒருவர் பூநகரி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments