கோத்தா வருவார் பின்னே:வெள்ளை வான் வருகிறது முன்னே?


கோத்தாபாய வருவதற்கு முன்னரே வந்ததும் தூக்குவேன் என அரச பணியாளர்களை ஈபிடிபி மிரட்ட தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று வடமராட்சி கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் கிருபா என்பவர் பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியுள்ள நிலையில் குறித்த ஈபிடிபி உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொற்றவத்தை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பில் சோதனை செய்வதற்கு கரவெட்டி பிரதேச சபை பொதுச் சுகாதார பரிசோதகர் நேற்று முன்தினம் அங்கு சென்றுள்ளார்.

அவர் கடமையைச் செய்ய விடாது கரவெட்டி பிரதேச சபையின் ஈபிடிபி உறுப்பினர் கிருபா என்பவர் இடையூறு விளைவித்துள்ளார் ஒரு கட்டத்தில் கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூங்குவேன் என்று பிரதேச சபை உறுப்பினர் எச்சரித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினரை அழைத்து விசாரித்தபொலிஸார் அவரைக் கைது செய்து பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றில் முற்றடுத்தியுள்ளனர்.

No comments