ஞாயிறிலும் வாக்காளர் அட்டை விநியோகம்?


இன்று ஞாயிற்றுக்கிழமை(03) விடுமுறை தினமாகவிருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சிறப்புச் சேவையாக வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காகத் தபால் பணியாளர்கள் இன்றைய தினம் வீடுகளுக்கு வருகை தருவதால் பொதுமக்கள் நாய்களைக் கட்டி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒரு கோடி எழுபது இலட்சம் வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டுத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments