புனர்வாழ்வளிக்கின்றார் கோத்தா?


மைத்திரி ரணில் அரசில் விரட்டியடிக்கப்பட்ட அதிகாரிகளினை மீண்டும் கதிரையில் அமர வைத்து கோத்தா அழகு பார்க்க தொடங்கியுள்ளார்.

புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (19) முற்பகல் 10.30 மணிக்கு இருந்த சுபநேரத்தில், ஜனாதிபதிக்கான தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ.ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, திறைசேரியின் செயலாளராக எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருக்கான நியமனக் கடிதங்களையும், ஜனாதிபதி கையளித்தார்.

பி.பீ.ஜெயசுந்தர மற்றும் ஆட்டிகல மைத்திரி அரசில் விரட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments