மேஜர் ஜெனரல் உட்பட நால்வருக்கு அரசாங்க பதவி

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பாரிய ஒப்பந்த முறைகேடு தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளியாக காணப்பட்ட பின்னர் 2008ம் ஆண்டு பொதுச் சேவைகளில் இருந்து பதவி விலகியவருமான பி.பி ஜயசுந்தர் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

மேலும்,

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ஒசத செனவிரத்ன நியமிக்கப்பட்டார்.

திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக எஸ்.ஆர்.ஆத்திகெல்ல நியமிக்கப்பட்டார்.

இவர்கள் இருவரும் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றனர்

No comments