மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரினார் திகா

கேகாலை - யட்டியாந்தோட்டை - கனேவலை தோட்டத்தில் அடையாளம் தெரியாத குழுவினர் நேற்று (18) இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தெரிவிக்கையில், சம்பவம் தொடர்பாக தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து உடனடியாக அவதானம் செலுத்துவதாக கூறினார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக தாம் யட்டியாந்தோட்டை காவற்துறையினருடன் கதைத்திருப்பதாகவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

No comments