வரதருக்கு கதிரையில் இருக்கமுடியாத வருத்தம்!


கோத்தபாயா ராஜபக்ச அமைச்சரவையில் எவ்வாறேனும் அமைச்சு கதிரையேற டக்ளஸ் ஒருபுறம் ஒட இன்னொருபுறம் அங்கயன் இராமநாதன் தனக்கு பதவி தர வலியுறுத்தி வருகின்றார்.

இதன் தொடர்ச்சியாக பரஸ்பரம் இருதரப்பும் தமக்கு தேவையான ஊடகங்கள் வழியே சேறுபூசலில் மும்முரமாகியுள்ளன.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் தனக்கொரு தேசியப்பட்டியல் ஆசனமென மானம் ரோசத்தை அடைவ வைத்து அலைந்து திரியும் வரதராஜப்பெருமாளிற்கு கோத்தாவின்  பதவி ஏற்பு விழாவில் கதிரை கூட வழங்கப்படாத பரிதாபம் நடந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சரான வரதராஜபெருமாளிற்கே இத்தகைய பரிதாபம் அரங்கேறியுள்ளது.

எனினும் அவரது ஆதரவாளர்களோ கதிரை ஒதுக்கியிருந்த போதும் இருக்கவிரும்பாமால் வரதர் எழுந்து நின்றதாக தெரிவித்துள்ளனர். 

No comments