பிபிசிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்:தொடங்கியது கோட்டா ஆட்டம்!


கோத்தபாய தொடர்பில் செய்தி அறிக்கையிட்ட பிபிசிக்கு எதிராக தனது அல்லக்கைகளை கொண்டு மீண்டும் போராட்டங்களை கோத்தபாய ஆரம்பித்துள்ளார்.பிரிட்டிஸ் தூதுவராலயம் முன்பதாக இப்போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

2014 இற்கு முன்னதாக தனக்கு எதிராக செயற்படுபவர்களிற்கு எதிராக இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்திருந்த கோத்தபாய தற்போது அதே உத்தியினை செயற்படுத்த தொடங்கியுள்ளார். 

இதனிடையே கோத்தா தொடர்புடைய வழக்குகளுடன் தொடர்புடையவரும் இலங்கையின் மிக அனுபவம் மிக்க, முன்னணி குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகர அந்த பதவியில் இருந்து நீக்கி, தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.நீண்டகாலமாக சி.ஐ.டி.யின் குற்றப் புலனாய்வாளராக கடமையாற்றி வரும் சானி அபேசேகர, சி.ஐ.டி. பொறுப்பதிகாரியாக, உதவி பொலிஸ் அத்தியட்சராக, பொலிஸ் அத்தியட்சராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையில், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சராக தரமுர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2017 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி சி.ஐ.டி.யின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments