பாத்திமா லத்தீப்-ன் மரணத்திற்கு நீதி கேட்டு, சென்னை ஐ.ஐ.டி முற்றுகை!

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை ஐ.ஐ.டிஐ முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

மாணவி பாத்திமா லத்தீப்-ன் மரணத்திற்கு நீதி கேட்டும், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்ய வலியுறுத்தியும், இட ஒதுக்கீட்டினை முறையாக அமல்படுத்தாமல் பார்ப்பனிய சாதி-மதவெறியினை வளர்க்கும் கூடமாக செயல்படுவதைக் கண்டித்தும், ஆர்.எஸ்.எஸ்-ன் அனைத்து அமைப்புகளையும் ஐ.ஐ.டி-ல் தடை செய்ய வலியுறுத்தியும், ஐ.ஐ.டி முற்றுகைப் போராட்டம் இன்று 20-11-2019 தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினால் தோழர் சீனி.விடுதலை அரசு தலைமையில் நடத்தப்பட்டது.இப்போராட்டத்தில் பல்வேறு இயக்கத் தோழர்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments