புதிய அமைச்சரவை பதவியேற்றது - விபரங்கள் இதோ


இடைக்கால அரசாங்கத்தின் 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று (22) சற்றுமுன் பதவியேற்றுக் கொண்டது.

அமைச்சரவை விபரம் வருமாறு,

- மஹிந்த ராஜபக்ச - நிதி, பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொருளாதாரம் மற்றும் கொள்கைத் திட்டமிடல், புத்தசாசனம், கலாச்சார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி.

- நிமால் சி.டி சில்வா - நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு.

- ஆறுமுகம் தொண்டமான் - சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு அபிவிருத்தி.

- தினேஸ் குணவர்த்தன - வெளிவிவகாரம், திறன் மற்றும் தொழிலாளர் அபிவிருத்தி.

- டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை.

- பவித்திரா வன்னியாராட்சி - சுகாதாரம், சுதேச மருத்துவம், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு.

- பந்துல குணவர்த்தன - தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்.

- ஜானக ப தென்னக்கோன் - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்.

- சமல் ராஜபக்ச - மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன்.

- டலஸ் அழகப்பெரும - கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகாரம்.

- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்.

- விமல் வீரவன்ச - சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவம்.

- மஹிந்த அமரவீர - பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி.

- எஸ்எம்.சந்திரசேன - சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகாரம்.

- ரமேஸ் பத்திரண - பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாயம்.

- பிரசன்ன ரணதுங்க - கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு அபிவிருத்தா, சுற்றுலா மற்றும் விமான சேவைகள்.

No comments