மாவீரர் நாளை குழப்பும் பிள்ளையான் கட்சி தவிசாளர்;

கோறளைப்பற்று வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதேச சபையின் பிள்ளையானின் கட்சியின் தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித் எதிர்வரும் 27/11/2019 அன்று கோறளைப்பற்று பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட கூட்டத்தினை ஒழுங்கு செய்துள்ளமை தமிழ் மக்களிடம் உணர்ச்சி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணிற்காக மரணித்தவர்களின் நினைவேந்தல் தினமான மாவீரர் நாளான அன்று கோறளைப்பற்று பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்ட கூட்டமானது ஒழுங்கு செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கதுடன், இது முழுமையாக எம்மவர்களின்  தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயல் எனவும், நடைபெறும் மாவீரர் நாள் நினைவேந்தல்களை குழம்பும்  செயல் என மட்டக்களப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.
      
  

No comments