காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

ம.யசோதா எனும் வட்டுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் வட்டுக்கோட்டை சந்திக்கு அருகே இந்து வாலிபர் சங்க புத்தகசாலைக்கு பின்புறமுள்ள பாழடைந்த கிணற்றில் அவரின் சடலம் இன்று (16) மீட்கப்பட்டுள்ளது.

துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்று பார்த்தபோதே சடல் கிணற்றில் இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த 11ம் திகதி தொடக்கம் அவர் காணாமல் போனார் என அவரது மகன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments