முழுத் தடைகளும் உடைத்து 6.05 மணிக்கு நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தடைகள் தாண்டி மாலை 6.05 மணிக்கும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

முன்னதாக பல்கலைக்கழக வளாகத்துக்குள் எந்த நிகழ்வையும் அனுஷ்டிக்க கூடாது என தடை விதிக்கப்பட்டதுடன், மாணவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு தகுதி வாய்ந்த அதிகாரியான பேராசிரியர் க.கந்தசாமியால் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அந்த தடைகள் முறியடிக்கப்பட்டு மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்ட்டது. இதன் தொடர்ச்சியாகவே இன்று மாலை 6.05 மணிக்கும் தடைகளைத் தாண்டி மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.





No comments