கோத்தா ஜனநாயக்கத்தை பின்பற்றுவது கடினம்

இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினமாகும் என்று அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது.

அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் பெருமளவில் இனவாத மோதல்கள் ஏற்பட்டன. அதன் போது சரத் பொன்சேக்கா பாரிய சேவையாற்றியுள்ளார்.

அந்த சேவையை ஒருநாளும் எம்மால் மறக்க முடியாது. எனவே சஜித் அரசாங்கத்தில் அவர் பாதுகாப்பு அமைச்சராக செயற்படடுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது - என்றார்.

No comments