பரபரப்பை ஏற்படுத்திய கலந்துரையாடல் சறுக்கல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (13) மாலை முதல் இரவு 10 மணி வரை இடம்பெற்றது.

பிரிங்டின் விடுதியில் கடும் வாதப்பிரதிவாதங்கள், சராமரியான தர்க்கத்திற்கு மத்தியில் நடைபெற்ற இக் கூட்டம் இணக்கமேதும் எட்டப்படாமலே முடிவடைந்துள்ளது.

பொது  உடன்படிக்கையில் கட்சிகள் எவையும் ஒப்பமிடாத நிலையில் குறித்த கலந்துரையாடல் நாாளை (14) பிற்பகல் 1.30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யார் கையொப்பம் வைக்காவிடனும் எங்களது முயற்சி தொடரும். ஒப்பமிட்ட கையொப்பங்களுடன் பொது உடன்படிக்கை வெளியிடப்படும் என்று மாணவர் ஒன்றியம் சற்றுமுன் அறிவித்தது.

No comments