கொழுந்துவிட்டு எரிந்த தொடரூந்து;65 பேர் உடல்கருகிப் பலி!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத் தென்பகுதியில் தொடரூந்தில் தீப்பிடித்ததில் 65 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பெரும்பாலானோர் தீ விபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தொடரூந்தில் இருந்து குதித்ததினால் பலியாகியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

சமையலுக்குப் பயன்படுத்திய எரிவாயுக் கலன் வெடித்ததினாலேயே  தீ விபத்து ஏற்பாட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கான், விபத்தில் பலியானவர்கள் குறித்து ஆழ்ந்த வருத்தமும் இரங்கலும் தெரிவித்துள்ளார்.

No comments