கைமீறிப்போனது முயற்சி; குழந்தை சுர்ஜித் இறந்துவிட்டது!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை, கடந்த நான்கு நாட்களாக மீட்கும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து மீட்பு பணிகளில் பின்னடைவு, கருவிகளில் ஏற்பட்ட பழுது காரணமாக 80 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது சுர்ஜித் இறந்துவிட்டதாக வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “நேற்று இரவு 10.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுகிய வாடை வெளிவந்திருக்கிறது. இது தொடர்பாக மருத்துவர்கள் குழுவினர் அளித்த தகவலின் அடிப்படையில், மீட்பு பணிகள் கடந்த 30 நிமிடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அழுகிய நிலையில் சுர்ஜித்தின் உடல் ஆழ்துளை கிணற்றில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இறந்துவிட்டது. குழந்தையின் உடலை வேறு வழிகளில் மீட்டெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

No comments