சுமந்திரன்,சிறீதரனின் மொழிபெயர்ப்பே கொழும்பிற்கு?


ஜந்து கட்சிகளது கூட்டில் தயாரான ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கான முன்மொழிவை மொழி பெயர்க்க  சுமந்திரன் மற்றும் சிறீதரன் முன்வந்துள்ளனர்.மொழி பெயர்க்கப்பட்ட ஆவணமே ஜனாதிபதி வேட்பாளர்களை சென்றடையவுள்ளது.

இதனிடையே கோத்தாபய ராஜபக்வை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது எனத்தெரிவித்துள்ள சிறீதரன் இன்று எமக்குள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் வாக்குரிமை என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போது பிரதான வேட்பாளர்கள் தத்தமது தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக முன்வைத்து வருகின்றனர். ஆகவே இன்னமும் சிறிது நாட்களில் தமிழ் மக்களின் தலைமைகள் என்ற வகையில் நாம் மக்களுக்கு ஏற்ற தீர்மானம் ஒன்றினை எடுப்போம்.

தமிழ் மக்கள் எம்மை பிரதிநிதிகளாக தெரிவு செய்து அரசியல் களத்தில் எம்மை இறக்கியுள்ள நிலையில் எமது மக்களை கைவிட்டு சுயநல அரசியல் செய்ய எம்மால் முடியாது. நாம் எப்போதும் எமது மக்கள் நலன்கள் சார் விடயங்களையே முன்னெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments