வடக்கு - கிழக்கிற்கு தனித்தனி நிவாரணத் திட்ட முதலீடு - சஜித் உறுதி


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியாக நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (30) வவுனியாவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் நானும் ஒருவன். உங்களின் கவலைகள், துன்பங்களை நான் அறிவேன். சஜித் ஆகிய நான் உங்களது கவலை, துன்பத்தை தீர்ப்பதில் பின்னிற்க மாட்டேன்.

வடக்கிற்கு தனியான நிவாரண திட்டம், கிழக்குக்கு தனியான நிவாரண திட்டத்தை நடைமுறைப்படுத்தி உலகில் உள்ள முதலீடுகளை இந்தப் பகுதிகளுக்கு கொண்டு வருவேன் - என்றார்.

No comments