வேட்பாளர்களின் பாதுகாப்பை உயர்த்த சிறிசே உத்தரவு

ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரது பாதுகாப்பையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று (15) நடைபெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இந்த முறை 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments