பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி! மோடி இரங்கல்;

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வடக்கேயுள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி - டன்ட்டா நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, திரிசுல்யா காட் என்ற மலைப்பகுதியில் கவிழ்ந்தது. சுமார் 75 பயணிகளுடன் ஒரு கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது அந்த சுற்றுலா பேருந்து , ஓட்டுனரின்  கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் பேருந்து மலைச்சரிவில் சிக்கி கவிழ்ந்து வீழ்ந்தது,

இந்த விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி, ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த மோசமான விபத்து குறித்து அறிந்து மிகவும் கவலையுற்றேன். இந்த துயரமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்என்று கூறியுள்ளார்.

No comments