தப்பித்துக்கொள்ள நாடகமாடும் கோத்தா?


தேசிய பாதுகாப்பு எனும் பேரில் தனக்கு தலையிடி தரக்கூடிய சிறையிலுள்ள படையினரை விடுவிக்க கோத்தா திட்டமிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.இதனாலேயே தற்போதைய அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தா தெரிவிததுள்ளரர்.

அவர் மேலும் கூறுகையில், அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களாக செயற்படும் இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இராணுவத்தின் கௌரவத்தை சீரழித்து விட்டனர். புலனாய்வுத் துறையினர் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையிலிட்டனர்.

புலனாய்வுத் துறை, பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட துறைகளை தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியே செயற்படுத்தினோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்கவே இந்த துறைகளை பயன்படுத்துகின்றது. எனவேதான் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியானது.

ஆகவே இவை எமது ஆட்சியில் சீர்செய்யப்படும். நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே எமது செயற்பாடுகள் அமையும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments