கோத்தாவிற்காக சீனா நேரடி களத்தில்?


சஜித்தின் வெற்றிக்காக இந்திய பின்னணியில் செயற்பட பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் வெற்றிக்காக சீனா நேரடியாகவே களமிறங்கியுள்ளது.
நேற்றைய கோத்தாவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் சீனத் தூதுவர் கலந்து கொண்டுள்ளார்.
கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் நேற்றுக் காலை நடந்த நிகழ்வில்இ கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில்இ பொதுஜன பெரமுன மன்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
சீன தூதுவர்; மற்றும் சீன இராஜதந்திரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சீன தூதுவருக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பிரமுகர்கள் வரிசையில் முதல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.
சில ஐரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகள் சிலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

No comments